CINEMA
1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!
சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அப்படி எப்போதும் சீரியலுக்கு என முக்கியத்துவம் கொடுக்கும் தொலைக்காட்சி சன் டிவி. சன் டிவியில் பல சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகும்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அவர்களுடைய வேலை பளு தெரியாமல் இருப்பதற்காக நாடகத்தைப் பார்த்து நிம்மதி அடைந்து கொள்வதாக உணர்கிறார்கள். சன் டிவியில் தினமும் 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப்போல. இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அண்ணன் தங்கை கதையை மையமாக வைக்கப்பட்டு இந்த சீரியல் கதைக்களம் நகர்கின்றது.
எப்போதும் போல அண்ணன் தங்கையை தவிர மற்ற அனைவர்களும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இவர்களின் பாசத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தற்போது சீரியல் நடிகர் சின்ராசு சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்கு பொன்னி போராடுகிறார். அதேபோல அண்ணனுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என்று மற்றொரு பக்கம் துளசியும் போராடுகிறார்.
இப்படி பல நாட்கள் இழுத்தடித்து வரும் இந்த சீரியலை தயவு செய்து முடியுங்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த நாடகத்திற்கு பதிலாக கண்ணான கண்ணே, நந்தினி சீரியலில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி மற்றும் பிக் பாஸ் கேப்ரில்லா இணைந்து நடிக்கும் முதல் கனவே சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் விரைவில் வானத்தைப்போல சீரியலுக்கு முடிவு கட்டிவிட்டு இந்த சீரியலை இறக்க சன் டிவி நிறுவனம் தயாராகியுள்ளது. விரைவில் அனைவரும் திருந்தி ஒன்றாக சுபம் போடும் கிளைமாக்ஸ் காட்சி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் முதல் கனவே சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பும் இருக்கின்றது.