“பள்ளி மைதானத்தில் விழுந்த 11-ஆம் வகுப்பு மாணவன்”… 10 நிமிடம் யாரும் பார்க்கவில்லையா?… சென்னையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்…!

Spread the love

சென்னையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த சர்வேஷ் என்ற மாணவன், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். மாணவன் விழுந்தவுடன் தாமதிக்காமல் உடனடியாக முறையான முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் அவனது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என அவதிப்படும் பெற்றோர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். இந்த துயர சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு முறையான மற்றும் தெளிவான பதிலை அளிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்த மாணவனின் பாட்டி கூறுகையில், தங்களுக்குப் பள்ளி நிர்வாகத்திடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில், மாணவனை ராஜாஸ் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகக் கூறப்பட்டதாகவும், ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். காலையில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்ற தங்களது பிள்ளை, மைதானத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக மயங்கிக் கிடந்தும் யாரும் உடனடியாகக் கண்டுகொள்ளவில்லை என்றும், தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“எனக்கு பயமா இருக்குமா… அந்த டீச்சர்…” விஷம் குடித்த மாணவி… அரசு பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்…. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் அறிவியல்…

7 minutes ago

என்ன கொடுமை சார் இது… 20 பூனைகள் கொடூரக் கொலை… கைதான 24 மணி நேரத்தில் அசால்ட்டா வெளியே வந்த கொடூரன்… விலங்கு நல ஆர்வலர்கள் கொந்தளிப்பு…!

செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24…

14 minutes ago

“இலாகாவை மாற்ற பிளான் போடுறீங்களா?”…. முடிஞ்சா தூக்குங்க…. மதுபான ஆலை அதிபர்களுக்கு அமைச்சர் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!

கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை…

16 minutes ago

“என்கூட வரமாட்டியா…” மகளை காப்பாற்ற பாய்ந்த பெற்றோர்… மனைவி, மாமனார், மாமியாரையும் சரமாரியாக குத்தி…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட…

19 minutes ago

ஓடும் காரில் கழுத்தறுப்பு… குடிநீர் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய சடலம்… வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி…

19 minutes ago

என் தம்பியவே திட்றீங்களா?…. விஜய் சேதுபதிக்காக இறங்கி அடித்த சீமான்…. தமிழக அரசியலில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள், தமிழக அரசியல் மற்றும் இணையதள தளங்களில்…

23 minutes ago