நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார மாணவ மாணவிகள் ஏராளமாக படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பள்ளி தொடங்கியது. 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனுடைய புத்தகப் பையில் புத்தகத்திற்கு இடையே கத்தி மறைத்து கொண்டு வந்துள்ளான். இதை ஆசிரியர் ஒருவர் பார்த்து தலைமை ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியரோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார் .
பின்பு போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த மாணவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து அவனை விசாரித்தனர். என்னை இப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று கத்தியை காட்டி என்னை மிரட்டினார் எனக்கு மிகவும் பயமாக இருந்தது அதனால் முன்னெச்சரிக்கையாக புத்தகத்தில் கத்தியை மறைத்து கொண்டு வந்தேன் என்று விசாரணையில் அந்த மாணவன் கூறியிருந்தார். இத்தகவலை கேட்ட ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் பேரதிர்ச்சி. பின்னர் மாணவரை போலீசார் எச்சரித்து விட்டு புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…