தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
குதிரை பேரம் மூலம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தங்களது எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதாக அதிமுக தரப்பில் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து தற்போதைய நிலவரம் மற்றும் அதிமுகவின் புகார்கள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…