“6 தொகுதி இடைத்தேர்தல்…. தவெகவில் யாருக்கு சீட்?”… கசிந்தது ரகசிய லிஸ்ட்…. கட்சிக்குள் வெடித்த கோஷ்டி மோதல்….!

Spread the love

தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியைத் தன் வசம் வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுமட்டுமன்றி மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதால், தமிழகத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக சார்பில் இந்த 6 தொகுதிகளிலும் போட்டியிடப் போவது யார் என்பதில் கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, தங்களின் எம்.எல்.ஏ பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தவெகவிற்கு வந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள், “நாங்கள் உங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்தோம், எனவே அதே தொகுதிகளில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட எங்களுக்கே முன்னுரிமை தந்து சீட் வழங்க வேண்டும்” என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மறுபுறம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தவெகவின் தீவிர நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள், “இடைத்தேர்தலிலாவது எங்களுக்கு முன்னுரிமை தந்து சீட் கொடுக்க வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களோடு சேர்த்து, அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகளில் இருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்த புதிய முகங்களும் தங்களுக்கு சீட் வேண்டும் என முட்டி மோதுகின்றனர். பழைய நிர்வாகிகள், கட்சி மாறிய முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாற்றுக்கட்சியினர் என மூன்று தரப்பும் ஒரே நேரத்தில் சீட்டுக்காக மல்லுக்கட்டுவதால், யாருக்கு வாய்ப்பளிப்பது என்ற பெரும் குழப்பத்திலும் தர்மசங்கடத்திலும் தவெக தலைமை ஆழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

2 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

3 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

9 minutes ago

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…

11 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… ஓடும் வாகனங்களுக்கு இடையே நடுரோட்டில் தரையிறங்கிய பாராகிளைடர்…!

ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…

16 minutes ago

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார்… அரசியல் பரபரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா, அக்கட்சியில்…

24 minutes ago