லக்னோவில் 19 வயது பிபிஏ மாணவர் ஒருவர் தனது தாயின் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை சேர்ந்த வாசுதேவ் மாலிக், ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார், நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வாசுதேவ் தனது தாயார் தீப்திக்கு பிறந்தநாள் கேக் வெட்டி தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பிறகு மறுநாள் திங்கட்கிழமை, வீட்டில் தனியாக இருந்தபோது, அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டது, அதில் அவர் “மன்னிக்கவும் அப்பா” என்று எழுதியுள்ளார். தனது மகன் இறப்பு குறித்து வாசுதேவ் தந்தை கூறுகையில், ” சிறிது காலத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், கொஞ்ச நாட்களாகவே யாரிடமும் அவர் பேசுவது கிடையாது என்றும், அவர் இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பார் என்று யாருக்கும் சிறிதும் தெரியாது என்றும் கூறியுள்ளார். பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பிறகு வாசுதேவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…