தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். பல கஷ்டங்களை தாண்டி படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய புகழை எட்டி இருக்கிறார். ஆனால் அவரின் மொத்த புகழையும் ஒரே நைட்டில் டேமேஜ் செய்து விட்டார் இசையமைப்பாளர் டி இமான். அதுதான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக சென்று வருகின்றது.
இப்படி டி இமான் பேசியது ஒரு பக்கம் வைரலாகி கொண்டிருக்க மற்றொரு பக்கமும் சிவகார்த்திகேயனுக்கு புது சிக்கல் வந்துள்ளது. அதாவது பொங்கல் அன்று அயலான் மட்டும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பொங்கல் ரிலீஸாக அயலான் திரைப்படத்துடன் இணைந்து விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படமும் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு பட குழு தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது. தங்களான் திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை தயாரித்தவர் ஞானவேல் ராஜா. அந்த சமயத்தில் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ பிரச்சினை இருந்ததாம்.
அதற்கு பழிவாங்க தான் தற்போது தங்கலான் திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் லால் சலாம் படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் என கூறப்படுகின்றது. ஏற்கனவே டி இமான் பிரச்சினையால் மிகவும் நொந்து போயிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடி விழுவது போல் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது அரசியல் களத்தில்…
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) எத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதற்கு உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் யூகோ…
மத்திய ஆசியாவுக்கான நுழைவாயிலாகக் கருதப்படும் ஈரானின் சபாஹார் துறைமுகத் திட்டம், தற்போது புவிசார் அரசியல் பதற்றங்களால் ஒரு இக்கட்டான நிலையை…
ஜகந்நாத்புரி கோவிலில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் கேட்டு கட்டாயப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பெண்ணின் காணொளி, தற்போது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும்…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஸ்தியில், வெறும் 2,000 ரூபாய் பணத்திற்காகப் பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…