தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷா இன்று காலை 11 மணியளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவர் காரில் வந்து இறங்கியதுமே ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டதால், சிறிது நேரம் கூட்டத்தில் சிக்கித் தவித்த திரிஷா, பின்னர் பாதுகாவலர்களின் உதவியுடன் மையத்திற்குள் சென்றார்.
வாக்குச்சாவடிக்குச் சென்ற திரிஷாவிடம், “இந்தத் தேர்தலில் மாற்றம் இருக்குமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் உள்ளே சென்ற அவர், வாக்களித்து முடித்த பின் தனது அடையாள மை வைக்கப்பட்ட விரலைக் காண்பித்தார். மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்டிப்பாக எல்லாரும் போய் ஓட்டு போடுங்கள், இன்று அதை மட்டும்தான் சொல்வேன்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அரசியல் குறித்த நேரடிப் பேச்சுகளைத் தவிர்த்து, குடிமகனாக தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
வாக்களித்துத் திரும்பிய திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மை வைக்கப்பட்ட விரலை உயர்த்திக் காட்டியபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் பின்னணியில், விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற “அர்ஜுனரு வில்லு” பாடலின் பின்னணி இசையை ஒலிக்கவிட்டுள்ளார். கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரிஷா இந்தப் பாடலைப் பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சமீபகாலமாக விஜய் மற்றும் திரிஷா குறித்துப் பல்வேறு கிசுகிசுக்களும், தகவல்களும் இணையத்தில் உலா வரும் சூழலில், திரிஷாவின் இந்த இன்ஸ்டா பதிவு ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒரே காரில் வந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது விஜய் படப் பாடலைத் தனது தேர்தல் பதிவிற்குத் திரிஷா பயன்படுத்தியிருப்பது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. திரையுலகினரும் ரசிகர்களும் இந்தப் பதிவை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
வங்கிக்கு வெளியே விதிகளை மீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று தடுத்த 50 வயது பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்தக் காலத்தில் அந்த நாடு தனது ஆயுத பலத்தைப்…
தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ள செய்தி நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026, ஏப்ரல் 24-ஆம் தேதி…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி…
ஈரான் தற்போது தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், அங்கு நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி…
அமெரிக்கக் கடற்படை செயலாளர் ஜான் பெலன் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் கடற்படையை நவீனப்படுத்தும் பணிகள் வேகம்…