உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபுரில் திருமணக் கோஷ்டியினர் பயணித்த பேருந்து, லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண விழா முடிந்து சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியுடன் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதுடன், வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணமகனின் தந்தை மற்றும் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்த காவல்துறையினர், அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…