“நான் கூப்பிடும்போது உள்ள வா”…. “கண்ணுல மிளகாய்ப் பொடி.. அப்புறம் வெட்டு”…. ‘கோலமாவு கோகிலா’ பாணியில் ரவுடியை தீர்த்துக்கட்டிய பெண்கள்….!

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த ரவுடியின் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி காளையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தப்பு இசைக்கலைஞரான தங்கமுனீஸ்வரன் (26) என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய குற்றப்பின்னணி காரணமாக காவல் துறையினரால் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சமீபத்தில் குண்டர் தடுப்பு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்த தங்கமுனீஸ்வரன், சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்த மருதாயி (40) என்பவருடன் முன்பகை காரணமாக மோதலில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே மருதாயி அளித்த புகாரின் பேரிலேயே தான் சிறை செல்ல நேரிட்டதாகக் கருதிய தங்கமுனீஸ்வரன், “உன்னை சும்மா விடமாட்டேன்” எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று தனது நண்பர்கள் இருவருடன் மருதாயியின் வீட்டிற்குச் சென்ற தங்கமுனீஸ்வரன், நண்பர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு வீட்டின் உள்ளே தனியாகச் சென்றுள்ளார். அவர் உள்ளே சென்றதும், திட்டமிட்டு மறைந்திருந்த மருதாயியின் மகன் வீட்டின் கதவைப் பூட்டினார். அதே நேரத்தில், சமையலறையில் இருந்து ஓடிவந்த முத்துமாரி என்ற பெண் தங்கமுனீஸ்வரனின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவினார். இதனால் நிலைதடுமாறிய அவரை, மருதாயி மற்றும் அவருடைய தோழிகளான ரம்யா, ஈஸ்வரி மற்றும் நண்பர் செல்வகுமார் ஆகியோர் சேர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

‘கோலமாவு கோகிலா’ திரைப்படப் பாணியில் பெண்கள் இணைந்து நடத்திய இக்கொலை சம்பவம் குறித்து சிவகாசி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக மருதாயியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவருடன் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்ட செல்வகுமார், ரம்யா, முத்துமாரி, ஈஸ்வரி மற்றும் மருதாயியின் மகன் ஆகிய மேலும் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

1 minute ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

7 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

29 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

41 minutes ago

“இனி இது ‘ட்ரான்ப் ஜலசந்தி'”…. அமெரிக்க அதிபரின் ஒற்றைப் பதிவால் உலகப் போருக்குத் தயாராகும் மத்திய கிழக்கு… பரபரக்கும் சர்வதேச அரசியல்….!

ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…

57 minutes ago

“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…

1 மணத்தியாலம் ago