தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் என தொடர்ந்து பிசியாக இருந்து வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவருடைய இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாலும் இருந்தாலும் இவருடைய படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் 25 வது திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு என்று அறிவித்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 25ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சுதா கொங்கரா இயக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றது.
இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ள நிலையில் இந்த திரைப்படம் 1960 காலகட்டங்களில் நடப்பதை மையமாகக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. படத்தின் டைட்டில் டீசரை படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவான படத்தில் தமிழில் சக்தி திருமகன் என்றும் மற்ற மொழிகளில் பராஷக்தி(PARASHAKTHI) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலுமே பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இந்த படங்கள் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி தெலுங்கில் பராஷக்தி என்ற தலைப்பை கடந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சான்றிதழை தன்னுடைய x பக்கத்தில் வெளியிட்டார். இப்படி இருவரும் ஒரே டைட்டில் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் இந்த பிரச்சினை ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சினை ஆரம்பித்துள்ளது. அதாவது,”நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியானது. பராசக்திபடத்தை நேஷனல் எடுத்து பெருமாள் முதலியாரின் நேஷனல் பிக்ச்சர்ஸ் . அந்த காலத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர். ஒல்லியாக இருக்கிறார் என்று சிவாஜியை AVM வேண்டாமென்று முடிவெடுத்தார்களாம். ஆனால் பெருமாள் முதலியார் தான் இந்த பையன் நடித்தே ஆக வேண்டும் என்று சொல்லி நல்ல சாப்பாடு போட்டு குண்டாக வைத்து பின்பு நடிக்க வைத்தாராம்.
சிவாஜி நடிப்பதற்கே காரணமானவர் இவர் தான். ஆனால் அந்த காலத்திலேயே எதோ ஒரு காரணத்தினால் படத்தின் மொத்த ரைட்ஸ்மே AVM-க்கு எழுதி கொடுத்துவிட்டாராம் பெருமாள் முதலியார். அதனால் தான் AVM வந்து டைட்டில் கேட்கும்போது அவர்கள் இதை கொடுத்திருக்காங்க. இப்போ அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் நாங்க பராசக்தி படத்தை டிஜிட்டலைஸ் பண்ணி ரிலீஸ் பண்ற முயற்சியி இருக்கும்போது நீங்க எப்படி இப்படி விடலாம் என்று கேள்வி கேட்கிறார்களாம். இதில் உண்மை என்னவென்றால் பராசக்தி வெளியாகி 75 ஆவது ஆண்டை முன்னிட்டு டிஜிட்டல் வெளியிட AVM தான் முயற்சி எடுத்திட்டு இருக்காங்களாம். பராசக்தி ரைட்ஸ் என்பது அந்த படத்தை எடுத்த நேஷனல் பிக்ஸர்ஸ்க்கு கிடையாதாம்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…