தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் எதுவென்றால் சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் பற்றி தான். டி இமான் கொடுத்த ஒரு பேட்டி தற்போது மிகப்பெரிய வைரலாகிவிட்டது. அதாவது டி இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்தது.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு டி இமான் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் சிவகார்த்திகேயன் பற்றியும் பேசி இருந்தார். அதாவது சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை தன்னால் மன்னிக்க முடியாது. இனிமேல் இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து படம் செய்வது என்பது முடியாத ஒன்று. அவர் செய்ததை நான் மன்னித்தாலும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து இமான் முன்னாள் மனைவியும் சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அவர் நல்ல மனிதர் என்றும் தன்னை விவாகரத்து செய்ய இமான் முடிவெடுத்ததை அறிந்து சமரசம் செய்ய வந்தார். ஆனால் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்ய அனைத்து வேலைகளையும் இமான் செய்திருந்தார் என இமானின் முதல் மனைவி மோனிகா பேட்டி அளித்திருந்தார்.
இப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அனைத்து மீடியாக்களிலும் அதைப் பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதை எப்படியாவது சரி படுத்த வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார். ஐடி விங்ஸ் இடம் கூறி இதனை வைரலாக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாக்களில் சிவகார்த்திகேயன் பற்றி பிரபலங்கள் பேசிய வீடியோக்களை தற்போது வைரலாகி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…
திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…
தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…