Connect with us

CINEMA

முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் வைகைப்புயல் வடிவேலு.. குதர்க்கமான combo-வா இருக்கே..

இயக்குனர் ரவிக்குமார் இன்று, நேற்று, நாளை திரைப்படம் மூலம் பிரபலமானார். தற்போது ரவிக்குமார் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் சொந்த படம் என்பதால் அயலான் திரைப்படம் நேரம் கிடைக்கும் போது மட்டுமே எடுக்கப்படுகிறது. இதனால் படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

   

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். வேறு கிரகத்திலிருந்து வரும் ஏலியனை சிவகார்த்திகேயன் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. பொதுவாக ஹாலிவுட்டில் தான் ஏலியன் கதை எடுப்பார்கள். முதன்முறையாக தமிழில் ஏலியனை வைத்து அயலான் படத்தை எடுக்கின்றனர். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு யாரை டப்பிங் பேச வைக்கலாம் என படக்குழுவினர் ஆலோசித்தனர். அப்போது சந்தானத்தை பேச வைக்கலாம் என யோசித்தபோது அவர் கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து நடிகர் வடிவேலு ஏலியன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என படக் குழுவினர் முடிவு எடுத்தனர்.

இதுகுறித்து நடிகர் வடிவேலுவிடம் பேச திட்டமிட்டுள்ளனர். அவர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று டப்பிங் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் திரைப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைத்து வேலைகளும் விரைவில் முடிவடைந்தால் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என கணிக்கப்படுகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top