ஜெமினிகணேசன் தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் இவர் பணியாற்றி புகழ் பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் புது முகங்களை தேர்வு செய்யும் கேஸ்டிங் டைரக்டராக பணியாற்றினார். 1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெமினி கணேசன். பிறகு 1952 இல் வெளியான தாய் உள்ளம், வல்லவனுக்கு வல்லவன் ஆகியா இரண்டு திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் ஜெமினி கணேசன்.
அதற்குப் பிறகு 1953 ஆம் ஆண்டு பெண் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெமினி கணேசன். மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நான் அவன் இல்லை திரைப்படத்தில் 9 தோற்றங்களிலும் ஜெமினி கணேசன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். பிறகு தமிழ் சினிமாவில் ஏறு முகத்தையே கண்ட ஜெமினி கணேசன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். காதல் சம்பந்தமான திரைப்படங்களில் அதிகமாக இவர் நடித்திருந்ததால் இவரை காதல் மன்னன் என்று மக்கள் அழைத்தனர்.
தென்னிந்திய மொழிகளில் மொத்தமாக 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் ஜெமினி கணேசன். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவரையும் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று அழைத்தனர். அந்தளவுக்கு பிரபலமாக இருந்தார் ஜெமினி கணேசன். ஆரம்பத்தில் AVM தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜெமினி கணேசன் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சிவாஜி நடித்த பராசக்தி படத்தில் பாடல்கள் பெரிய ஹிட் அடிக்க சிவாஜி தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். படத்தின் இயக்குனர் தாதா நிராசுக்கு தமிழ் தெரியாது என்பதால் காட்சிகளை விளக்கிச் சொல்லும் பொறுப்பு சிவாஜிக்கு இருந்தது. அந்த வகையில் கடந்த கதையின் முக்கிய கருவை அடிப்படையாக வைத்துக் காட்சியை விளக்கி பாடலை கேட்கிறார்.
சிவாஜி விளக்கிய காட்சிக்காக கண்ணதாசன் பாடல்களை எழுதிக் கொடுக்க அவருக்கு பாடல்கள் திருப்தியாக இல்லை. ஒரு கட்டத்தில் தான் என்ன செய்வது என்று தெரியாத சிவாஜி கணேசன் இந்த பாடலில் நான் எப்படி நடிக்க போகிறேன் என்பது பற்றி நடித்துக் காட்டியுள்ளார். ஆனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எதுவும் சிவாஜிக்கு திருப்தி இல்லையாம். அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சிவாஜி குறுக்கும் நடுக்கும் சுவற்றில் முட்டிக்கொண்டு சட்டையை கிழித்துக்கொண்டு ஒரு வார்த்தையை கூறியுள்ளார். அந்த வார்த்தையை பிடித்துக் கொண்ட கண்ணதாசன் அதையே பாடலாக மாற்றியுள்ளார். அந்த பாடல் தான் எங்கே நிம்மதி என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…
உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…
தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…
சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…