Categories: சினிமா

பல நூறு குயில்களை கூண்டில் அடைத்து வைத்த சிவாஜி கணேசன்! பிரபல பாடகி சொன்ன ஒரே வார்த்தையால் மனம் திருந்திய நடிகர் திலகம்!  என்னவா இருக்கும்?

Spread the love

நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழும் சிவாஜி கணேசன், பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருபவர். அவரின் நடிப்பிற்கு ஈடு வேறு எவருமே இல்லை என்று புகழும் அளவுக்கு எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக ஏற்று நடிப்பவர் அவர். இது ஒரு பக்கம் இருக்க, சிவாஜி கணேசனுக்கு அசைவ உணவுகளில் அதிக ஈடுபாடு உண்டு என்று கூறப்படுகிறது.

குறிப்பாக அவருக்கு குயில் மாமிசம் மிகவும் பிடிக்குமாம். அதற்காகவே அவரது வீட்டில் பல குயில்களை மாமிசத்திற்காக வளர்த்து வந்தாராம். ஒரு நாள் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்தாராம்.

லதா மங்கேஷ்கரும் சிவாஜி கணேசனும் உடன் பிறந்தவர்கள் போல் பழகி வந்தவர்கள். பம்பாய்க்குச் சென்றால் சிவாஜி கணேசன் லதா மங்கேஷ்கரின் வீட்டில் தங்குவாராம். லதா மங்கேஷ்கர் சென்னை வந்தால் சிவாஜி கணேசனின் வீட்டில் தங்குவாராம்.

அவ்வாறு ஒரு முறை லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்தபோது, பல கூண்டுகளில் பல குயில்கள் அடைந்துகிடப்பதை பார்த்திருக்கிறார். “இது என்ன இவ்வளவு குயில்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள்?” என்று லதா மங்கேஷ்கர் கேட்க, அதற்கு சிவாஜி கணேசன், “எல்லாம் சாப்புடுறதுக்குதான்” என்று பதிலளித்தாராம்.

இதனை கேட்டதும் லதா மங்கேஷ்கருக்கு அழுகையே வந்துவிடுவது போல் இருந்ததாம். “தயவுசெய்து இந்த கூண்டுகளில் இருக்கும் குயில்களை பறக்கவிடுங்கள்” என்று லதா மங்கேஷ்கர் கேட்டுக்கொண்டாராம்.

அவர் அப்படி கேட்ட மறுநிமிடமே, அனைத்து கூண்டுகளிலும் உள்ள குயில்களை பறக்கவிட்டாராம் சிவாஜி கணேசன். அன்றில் இருந்து குயில் கறியை இனிமேல் சாப்பிடவே கூடாது என்று முடிவெடுத்தாராம் சிவாஜி கணேசன்.

Arun

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

7 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

7 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago