கடலூர் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த பிரசாத் (41) என்பவர், தனது பக்கத்து வீட்டுப் பெண்ணான அபிதா (22) என்பவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தத் தொல்லை குறித்து அபிதா, தனது அக்கா கவிப்ரியாவிடம் (24) கூறியுள்ளார். கவிப்ரியா தனது கணவர் முத்துக்குமரன் (30) என்பவருடன் சேர்ந்து பிரசாத்தை பலமுறை கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை மதுபோதையில் இருந்த பிரசாத், கவிப்ரியாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தனது தங்கைக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கண்டிக்கச் சென்ற கவிப்ரியா மற்றும் முத்துக்குமரனையும் கடுமையாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கவிப்ரியாவும் அவரது கணவரும் சேர்ந்து பிரசாத்தைத் தாக்கி, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். கொலை நடந்த அன்றிரவே கவிப்ரியா திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். தனது தங்கைக்கு ஏற்பட்ட தொல்லை மற்றும் பிரசாத்தின் மிரட்டல் காரணமாகவே கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கவிப்ரியாவையும், தலைமறைவாக இருந்த அவரது கணவர் முத்துக்குமரனையும் கைது செய்தனர்.
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM)…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு கோரிக்கை குறித்து விவாதிக்க, விடுதலைச்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எவருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம்…
திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, இன்று பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும், சிறந்த அப்பாவாகவும் மிளிர்பவர் நடிகர் மாதவன். தமிழ்,…
தமிழக அரசியலில் 2026 தேர்தல் முடிவுகள் எக்காலத்திலும் இல்லாத ஒரு மும்முனைப் போட்டிக்கும், அரசியல் சாசன நெருக்கடிக்கும் வித்திட்டுள்ளன. ஆட்சியமைக்கத்…