Categories: சினிமா

அந்தப் படத்துல தனுசுக்கு ஜோடியா நடிக்க கூப்பிட்ட வெற்றிமாறன்.. வாய்ப்பை உதறித் தள்ளிய சிறகடிக்க ஆசை மீனா..!

Spread the love

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா. கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்படியும் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று பலரும் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் கோமதி பிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் இவர்தான் கதாநாயகியாக இருக்கிறார். ஏற்கனவே வேலைக்காரன் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தற்போது கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த வருடத்தில் விஜய் டிவியின் அவார்ட் ஃபங்ஷனில் இவருக்கு சிறந்த கதாநாயகிக்கான விருது வழங்கப்பட்டது. இவருக்கு சீரியலில் எப்படி அப்பா இல்லையோ அதனைப் போலவே நிஜத்திலும் அப்பா இல்லை. சில வருடங்களுக்கு முன்புதான் அவர் உயிரிழந்தார். தனது தம்பி மற்றும் தங்கைகளை அம்மா கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் தனியாக அம்மா எங்களுக்காக பல கஷ்டப்பட்டு இருக்காங்க என்றும் அவர் வேதனையுடன் கூறியிருந்தார்.

பிறகு சென்னைக்கு வேலைக்கு வந்த கோமதி பிரியா சீரியலில் நடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து உள்ளார். பிறகு நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.  இப்படியான நிலையில் கோமதி பிரியா சினிமாவில் தனக்கு வந்த மிகப் பெரிய வாய்ப்பை நிராகரித்து விட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதாவது வெற்றிமாற நீ இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் கொடுத்த அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளம் வயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க கோமதி பிரியாவை தான் ஆடிஷன் செய்து வெற்றிமாறன் செலக்ட் செய்துள்ளார்.

அதன் பிறகு திருநெல்வேலியில் படப்பிடிப்பு இருக்கு என்று கூறிய நிலையில் அந்த சமயத்தில் தெலுங்கு சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கோமதிப்பிரியா அசுரன் பட வாய்ப்பை ரிஜெக்ட் செய்துள்ளார். கோமதி பிரியா நடிக்க மறுத்த பிறகு தான் அந்த வாய்ப்பு நடிகை அம்மு அபிராமிக்கு சென்றது. இப்படி ஒரு சூப்பரான வாய்ப்பை தவற விட்டதற்காக தான் வருந்தவில்லை என்றும் அதை ஏற்று இருந்தால் என்னுடைய பாதை சினிமா பக்கம் சென்று இருக்கும் எனவும் சீரியலில் நடிப்பது தான் தனக்கு சந்தோஷம் எனவும் கோமதி பிரியா பேசியுள்ளார்

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

2 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

2 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

2 மணத்தியாலங்கள் ago