வேலூரில் திமுக மாமன்ற உறுப்பினர் வீட்டில் வைத்து எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்யப்படுவதாக அதிமுகவினர் எழுப்பி உள்ள குற்றச்சாட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நான்காம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 4 ஆம் தேதியோடு இந்த பணி முடிவடைய உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை கொடுத்து வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வேலூரில் திமுக மாமன்ற உறுப்பினர் இல்லத்தில் வைத்து இந்த படிவங்கள் பூர்த்தி செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிமுக வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வீடு வீடாகச் சென்று நேரடியாக வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறாமல் ஒரே இடத்தில் திரட்டுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்காளர் பட்டியலில் மீண்டும் குளறுபடிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதனால் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…