உலக வல்லரசாகவும், பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் முக்கிய சக்தியாகவும் விளங்கும் அமெரிக்கா, சர்வதேச விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு செய்து வருகிறது. டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, பல நாடுகளின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்களை நடத்துவதுமாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசியல் பஞ்சாயத்துகளைச் செய்யும் அதேவேளையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடிச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இத்தகைய சூழலில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அதிகாரிகள் செய்துள்ள ஒரு விசித்திரமான செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும், பாதுகாப்புத் துறை செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த இறால்களை அந்த அதிகாரிகள் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். ஒரு பக்கம் உலக நாடுகள் மீது கடுமையான போர்க் கொள்கைகளை வகுத்துவிட்டு, மறுபக்கம் பொதுமக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு ஆடம்பரமான செலவுகளைச் செய்திருப்பது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…