பொதுவாகவே கரும்புச்சாறில் எண்ணற்ற ஆரோக்கிய பயன்கள் இருந்தாலும் சில நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு இது குடிக்கக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி குடிக்க கூடிய ஒரு ஜூஸ் என்றால் அது கரும்பு ஜூஸ் தான். கரும்பில் கார்போஹைட்ரேட், மினரல்ஸ், ப்ரோடீன்ஸ், இரும்பு, ஜிங்க், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்ஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கரும்பு ஜூஸ் குடிக்கும் போது உடனடி ஆற்றல் அளிக்கின்றது. செரிமானத்தையும் மேம்படுத்தும். சிறுநீர் பாதை நோய் தொற்றுவதை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி தொண்டை மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றது.
இதனைத் தவிர எலும்புகளையும் வலுப்படுத்தும். இத்தனை பயன்கள் கரும்பு ஜூஸில் நிறைந்திருந்தாலும் அதை ஒரு சில பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கக்கூடாது. அதாவது உங்களுக்கு ஏற்கனவே அதிக கொழுப்பு இருந்தால் அதாவது கொலஸ்ட்ரால் இருந்தால் கரும்புச் சாறு குடிக்க வேண்டாம். காரணம் அதிக கொழுப்பு இருப்பதால் உங்களுடைய இதயத்திற்கு ஒரு பிரச்சனையை இது ஏற்படுத்தலாம். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் எடையை குறைக்க நீங்கள் ஒரு டயட்டை பின்பற்றினால் அந்த சமயத்தில் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது.
ஒருவேளை மீறி எடுத்துக் கொண்டால் நீங்கள் எடை குறைக்க டயட் இருப்பதற்கு கரும்பு சாறு ஒரு தடையாக மாறிவிடும். கரும்புச்சாறில் நிறைய கலோரிகள் மற்றும் சர்க்கரை நிறைந்திருப்பதால் எடை அதிகரிக்க இது வழிவகுக்கும். கரும்புச்சாறில் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்து இருக்கின்றன. எனவே உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் கரும்புச் சாறு குடிக்க வேண்டாம். இது ரத்த சர்க்கரை அளவை விரைவில் அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கரும்புச்சாறில் சில நேரம் பாக்டீரியா மற்றும் அசுத்தங்கள் இருக்கக்கூடும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…