ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியின் மகளான ரிஷிகா பிரியா என்ற சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் குல்வர்தன் (30) என்ற நபர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. போதைக்கு அடிமையான அந்த நபர், சிறுமியைத் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பின்னர் கொடூரமான முறையில் சிறுமியின் உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரைக் கண்டதும் குற்றவாளி தப்பியோடிய நிலையில், அவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் முழுவதையும் உலுக்கியுள்ள இந்தச் சம்பவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…