அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், 27 வயதான ஹெலினா நிக்கோல் ஹோய்ல் என்ற பெண் தனது சொந்த இரண்டு மகள்களையே போதைப்பொருள் மற்றும் பணத்திற்காக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டதற்காக கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குழந்தைகளை கடத்துதல், விற்பனை செய்தல் மற்றும் கவனக்குறைவாக இருத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த பெர்க்லி கவுண்டி அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் அடையாளம் தெரியாத பல நபர்களால் தாங்கள் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக அந்த சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒருமுறை தனது மகள் சீரழிக்கப்படும் போது, அந்தத் தாய் அறையின் தரையில் அமர்ந்து கைப்பேசியில் டிக்டாக் பார்த்துக்கொண்டு இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சட்டவிரோத பரிமாற்றத்தில் அவர் பெற்ற பணம் மற்றும் போதைப்பொருளின் முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மேலும், இந்த குழந்தைகள் தங்களது வீட்டின் மோசமான வறுமை நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். வீட்டில் குடிநீர் மற்றும் குழாய் வசதிகள் கூட இல்லாததால், குளிப்பதற்கோ அல்லது பல் துலக்குவதற்கோ வழியில்லாமல் அடிப்படை சுகாதாரமின்றி வாழ்ந்து வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவங்களைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஹோய்ல் பெர்க்லி கவுண்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றத்தால் 2,50,000 அமெரிக்க டாலர்கள் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…