உப்புக்கு பதிலா சலவைத்தூளா?… சமையலறையில் உச்சக்கட்ட அலட்சியம்… 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அரசு அதிரடி விசாரணை உத்தரவு…!!

Spread the love

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள பராசி அரசு நடுநிலைப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சோயாபீன் சாதத்தில் உப்பு குறைவாக இருப்பதாக சில மாணவர்கள் கூறியுள்ளனர். அப்போது, சமையலறையில் உப்பும் சலவைத்தூளும் ஒரே இடத்தில் அருகருகே வைக்கப்பட்டிருந்ததால், சமையல்காரர் கவனக்குறைவாக சலவைத்தூளை எடுத்து உணவில் கலந்துள்ளார். இந்த சலவைத்தூள் கலந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்குச் சிறிது நேரத்திலேயே வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளியிலேயே முதலுதவி வழங்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பீகார் ஷெரீப் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது குழந்தைகள் அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தலைமை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, பீகார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும், உணவு தயாரிப்பில் நடந்த இந்த கடுமையான அலட்சியம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Gayathri

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

4 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

4 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

4 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago