“13 வயது சிறுமி.. 42 வயது மணமகன்.. பேரனுக்காக தாத்தா செய்த விபரீத பேரம்… இரவோடு இரவாக கோவிலில் நடந்த பயங்கரம்… இந்தூரில் அரங்கேறிய அதிர்ச்சி குழந்தை திருமணம்”..!!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 13 வயது சிறுமி ஒருவரை 42 வயது நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது தாய் மறுமணம் செய்துகொண்டதால், சிறுமி தனது உடன்பிறப்புகளுடன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் தாத்தா, பேரனுக்குப் பெண் எடுப்பதற்காக ஒரு விசித்திரமான நிபந்தனைக்குச் சம்மதித்து, இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். மணமகனின் தந்தை விதித்த நிபந்தனையின்படி, தனது மகளை தாத்தாவின் பேரனுக்குத் திருமணம் செய்து தர வேண்டுமானால், அதற்குப் பதிலாக 13 வயது சிறுமியை தனது 42 வயது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த விபரீதத் திருமணம் குறித்து மத்தியப் பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பறக்கும் படைக்குத் தகவல் கிடைத்தது. அதிகாரிகள் விரைந்து வந்து இரு குடும்பத்தினரையும் எச்சரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தடுத்தனர். இருப்பினும், அதிகாரிகளின் கணக்கில் மண்ணைத் தூவிவிட்டு, ஏப்ரல் 26-ஆம் தேதி இரவோடு இரவாக சிறுமியை இந்தூரிலிருந்து உஜ்ஜைனுக்குக் கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சிறுமியை மீண்டும் தாத்தா வீட்டிற்கே அழைத்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்குப் பிறகு, மாமியார் வீட்டிற்குச் செல்ல மறுத்த சிறுமியை அவரது குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கி, வற்புறுத்தியுள்ளனர். இந்தச் சித்திரவதை குறித்துப் புகார் எழுந்ததை அடுத்து, காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ், 42 வயது மணமகன், அவரது தந்தை, சிறுமியின் தாத்தா, பாட்டி மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் உட்பட மொத்தம் 13 பேர் மீது காவல்துறையினர் நேற்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

3 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

3 மணத்தியாலங்கள் ago