Connect with us

CINEMA

நடுராத்திரியில் தனது வளர்ப்பு மகளால் கொடூரமாக தாக்கப்பட்ட நடிகை ஷகீலா.. நடந்தது என்ன ..? வெளியான திடுக்கிடும் தகவல்..

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஷகீலா. முதலில் மற்ற நடிகைகளை போலவே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஒரு சில சூழ்நிலை காரணங்களால் கிளாமர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து கிளாமர் குயினாக வலம் வந்தார் ஷகீலா. சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள்.

   

இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாகவும் எடுத்துள்ளார். மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் ஷகிலா என்பவருக்கு இருந்த பிம்பத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்தார்.

இந்நிலையில் நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் மற்றும் உறவினர்கள் இணைந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து முதற்கட்ட விசாரணையை கோடம்பாக்கம் போலீசார் ஆரம்பித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளையும் விசாரணைக்குக் கைப்பற்றியுள்ளனர். ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல் மற்றும் ஷகீலா இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஷீத்தல் தாய், சகோதரி ஆகியோர் இணைந்து ஷகிலா மற்றும் அவரது வழக்கறிஞரைத் தாக்கியதாகப் புகார் தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை கோடம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். முதலில் அங்குள்ள சிசிடிவி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  தற்பொழுது இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top