ஈரோடு மாவட்டத்தையே உலுக்கியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. தங்கள் மகனின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து, அவனது எதிர்காலத்தை வளர்க்க நினைத்த ஒரு தந்தை, அதுவே தன் குடும்பத்தைச் சிதைக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஈரோடு கதிரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார் நிறுவன விற்பனை பிரதிநிதி ஒருவரின் 11 வயது மகன், தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள அச்சிறுவனை, பெற்றோர் மோளகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜா (30) என்ற பயிற்சியாளரிடம் சேர்த்துள்ளனர். தனியார் மருத்துவமனை ஊழியரான முத்துராஜா, பகுதி நேரமாக கூடைப்பந்து பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.
தினமும் சிறுவனைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற அவனது தாய், அங்குள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். இந்தச் சூழலில், பயிற்சியாளர் முத்துராஜாவுக்கும், அந்த ஆசிரியைக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் நெருங்கிப் பழகும் அளவுக்குச் சென்றுள்ளனர். இதனிடையே, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். அப்போதுதான், கோச்சிங் சென்டரில் நடந்த மற்றொரு கொடூரமான உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பயிற்சியாளர் முத்துராஜா, அந்த 11 வயது சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து, தவறான முறையில் தொட்டுப் துன்புறுத்தியுள்ளார். இக்கொடுமை குறித்து அச்சிறுவன் தனது தந்தையிடம் கூற, அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், முத்துராஜாவின் இந்த அசிங்கமான செயலுக்குத் தனது மனைவியும், முத்துராஜாவின் நண்பரான வினோத் (29) என்பவரும் உடந்தையாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். வினோத், முத்துராஜா பணிபுரியும் அதே மருத்துவமனையின் மனித வள பிரிவில் (HR) பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுவனுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, பயிற்சியாளர் முத்துராஜா, அவருக்கு உடந்தையாக இருந்த வினோத் மற்றும் பெற்ற தாயான ஆசிரியை ஆகிய மூன்று பேரையும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு ஆசிரியையாகவும், பெற்ற தாயாகவும் இருந்து கொண்டு தன் மகனுக்கே நடந்த அநீதிக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், பெண் குழந்தைகளைப் போல ஆண் குழந்தைகளையும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்துவதுடன், குழந்தைகளை யாரிடம் ஒப்படைக்கிறோம் என்பதில் பெற்றோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…