ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு விட்டது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்பொழுது மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சென்னையில் ஏ ஆர் எஸ் கார்டனில் தான் விஜய் மற்றும் சன் டிவி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா போன்ற தொடர்கள் அங்கு தான் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அங்குள்ள சீரியல் செட் வீடுகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றது. அங்கு தண்ணீர் சரியாகி பழையபடி மாற 10 நாட்களுக்கு மேல் ஆகும் என அங்குள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஷூட்டிங்கும் தற்பொழுது நிலைமை சரியாகும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…