Connect with us

CINEMA

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை வனிதா ஹரிஹரனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்….

இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’.இந்த சீரியலை மறைந்த இயக்குனர் தாய் செல்வம் அவர்கள் இயக்கியுள்ளார்.

   

இந்த சீரியலில் செந்தில் குமார், மோனிஷா,  ரக்ஷிதா மகாலட்சுமி,  அழகு, சபித்த, கல்பனா ஸ்ரீ,  வனிதா ஹரிஹரன்,  அன்பழகன்,  மைனா நந்தினி, ரேகா, தீபா போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை வனிதாக ஹரிஹரன்.

இவர் சென்னையைச் சேர்ந்தவர். எஸ் பி ஐ ஓ ஏ  மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.அதை தொடர்ந்து  சென்னையில் உள்ள லயோலோ கல்லூரியில்  Visual Communication படித்தார். அதை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘தலையணை பூக்களில்’ சீரியல் மற்றும்  சன் டிவியில் ஒளிபரப்பான ‘பொன்னூஞ்சல்’சீரியலிலும்  நடித்துள்ளார்.இதை தொடர்ந்து  பிரியமானவள், மகராசி,  பகல் நிலவு,  சரவணன் மீனாட்சி போன்ற சீரியலில் நடித்துள்ளார் நடிகை வனிதா ஹரிஹரன்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். இவர் வெள்ளைக்கார துரை, மாயா, கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை வனிதா ஹரிஹரன் கார்த்திக் அசோக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சீரியலில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.

இவர் தற்போது பெல்ஜியம் நாட்டில் செட்டில் ஆகி உள்ளார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் தன் மகன் மற்றும் கணவனுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top