Connect with us

CINEMA

‘கனவு நனவாகிடுச்சு’… புது வீடு கட்டி குடியேறிய பிரபல சீரியல் நடிகை.. அவரே வெளியிட்ட வீட்டின் புகைப்படங்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா. இந்த சீரியலில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர். இன்று வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரை நடிகர், நடிகைகளை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதிலும் சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து பிரபலமடைந்து விடுகின்றனர்.

  

   

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் ரன் சீரியலிருந்து பாதியிலேயே விலகி ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடித்தார். மேலும் இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சரண்யா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு  ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது பல நாள் கனவு நனவாகி இருப்பதாக கூறி தனது புது வீட்டின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது புது வீட்டில் முதல் கார்த்திகை தீபத்தையும் கொண்டாடியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top