![jyothika 1 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/jyothika-1.jpg)
CINEMA
நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி பிறந்தவர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் அப்பா சந்தர் சாதனா திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். நடிகை ஜோதிகாவுக்கு என்று இரண்டு சகோதரிகளும், சூரஜ் என்கின்ற சகோதரரும் இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாகி இருக்கும் ஜோதிகா முதன்முதலாக ஹிந்தி படத்தின் மூலமாகத்தான் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார். தமிழில் அஜித் அவர்கள் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதி, குஷி, தூள், காக்க காக்க, திருமலை, பேரழகன், சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
சூர்யாவுடன் மட்டும் 7 படத்திற்கு மேல் இணைந்து நடித்த இருவரும் காதலித்து 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா என்கின்ற பெண் குழந்தையும், தேவ் என்கின்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா பின்னர் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்றி கொடுத்தார்.
தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது மும்பையில் செட்டிலாகி இருக்கும் ஜோதிகா ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. மும்பைக்கு சென்றதிலிருந்து ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஜோதிகாவின் அம்மாவா இது? என்று கேட்டு வருகிறார்கள்.