நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

By Mahalakshmi on வைகாசி 13, 2024

Spread the love

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு தொடர்ந்து நடிகர்களிடம் நிதி வசூல் செய்து வருகின்றது நடிகர் சங்கம்.

   

இந்த கட்டிடத்தின் முழுமையாக கட்டி முடிக்க இன்னும் சில கோடிகள் தேவைப்படுவதால் இதற்கான நிதியை திரட்டுவதற்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து அனைத்து நடிகர்களிடம் உதவி கோரி வருகிறார்கள். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் காசோலையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியிருந்தார்.

   

 

அதைத் தொடர்ந்து விஜய் சூர்யா கார்த்திக் என பல நடிகர்கள் நடிகர் சங்க கட்டத்திற்கு தொடர்ந்து பண உதவி செய்து வருகிறார்கள். நடிகர் நாசர் மற்றும் கார்த்திக் முழு முயற்சியுடன் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கியிருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நடிகர் சங்கத் கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு இன்னும் 40 கோடி நிதி தேவைப்படும் நிலையில் உலகநாயகன் கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய், நடிகர் நெப்போலியன் ஆகியோர் தல ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார்கள்.

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி நிதி வழங்கியிருக்கின்றார். நடிகர் தனுஷுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்திக் ஆகியோர் நன்றி தெரிவித்த அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் புகைப்படம் ஒன்றையும் வெளியிடுகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by South Times (@southtimes)