அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது பொதுவாகவே எல்லா துறைகளிலும் பெண்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இது போன்ற தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது சினிமா துறையில் இது அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் இது பற்றி பேசுவதற்கு பல நடிகைகள் தயங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக வெளிப்படையாக பேச தொடங்கி விட்டனர். அதுபோலத்தான் சீரியல் நடிகை ரிஹானா பல பேட்டிகளில் சினிமா சின்னத்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் தொடர்பாக வெளிப்படையாக பேசி வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எப்போதுமே நடிகைகளுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நடிகைகள் அவர்களுடைய உறவினர்கள் அல்லது கணவர், மாமியார் யாரையாவது ஒருவரை ஷூட்டிங் வரும்போது கூட்டிட்டு வர வேண்டும். தயாரிப்பாளரோ, நடிகரோ அல்லது இயக்குனரோ ஒருவர் நம்மிடம் நேரடியாக நெருங்க முடியாத வகையில் நாம் இருந்து கொள்ள வேண்டும். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஷாலினி இந்த விஷயத்தில் பக்காவாக செயல்படுவார்.
நானும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த போது அந்த பொண்ணு நடிக்க வந்த புதிதில் எப்படி மேக்கப் போடணும் என்று கூட தெரியாது. அவங்க விஜய் டிவியில் கதாநாயகி என்ற நிகழ்ச்சி மூலம் தான் வெற்றி பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்தாங்க. நான் தான் அவங்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். சூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்போதும் அவருடைய மாமியாருடன் தான் வருவார். மாமியாரை அம்மா என்று தான் கூப்பிடுவாங்க. அவங்க மாமியாரும் ஷாலினியை என்னுடைய பொண்ணு தான் என்று சொல்லுவாங்க.
அவங்களும் ஒரு நிமிடம் கூட ஷாலினியை விட்டு தள்ளி போக மாட்டாங்க. ஷாலினிக்கு எது தேவையோ எல்லாவற்றையும் அவங்க தான் பாத்துக்குவாங்க. ஆரம்பத்தில் மேக்கப் போன்ற பொருட்களை என்னிடம் தான் வாங்கிட்டு வர சொன்னாங்க. நான் மேக்கப் பொருட்கள் வாங்கி கொடுத்ததும் அவங்க காசு தந்துட்டாங்க. இதுபோல சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருவரை துணையோடு கூட்டிட்டு வந்தால் அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு செய்பவர்களால் நம்மிடம் நெருங்க முடியாது. நம்ம கூட யாரும் இல்லனா அவங்க நம்ம கிட்ட தவறா தான் நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள் என்று ரிஹானா பேசியுள்ளார்.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…