Categories: சினிமா

கோபம் வரும்போது எல்லாம் எம்ஜிஆர் கேட்கும் சிவாஜியின் பாடல்.. இன்னைக்கும் அந்த பாட்ட கேட்டா மனம் சாந்தமாகிடுமாம்..!

Spread the love

இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார்.  இப்படியான நிலையில் எம்ஜிஆருக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு சிவாஜியின் பாட்டை கேட்பாராம். அதாவது இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆண்டவன் கட்டளை. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரையும் வைத்து படங்களை இயக்கியவர் இயக்குனர் கே ஷங்கர் இந்த திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் சிவாஜியை வைத்து முருகனின் அறுபடை வீடுகளில் வைத்து ஒரு பாடல் காட்சியை எடுக்கப் போவதாக சொல்ல, சிவாஜியோ ஒரு பாடலுக்கு இத்தனை இடங்களில் வைத்து எடுக்க வேண்டுமா என்று சலிப்புடன் கேட்டுள்ளார். இந்த பாடல் காட்சி உங்களுக்கு பெரிய அளவு பெயர் தேடித் தரும், அதனால் நீங்கள் சிரமப்பட்டு தான் ஆக வேண்டும், இது முருகனின் கட்டளை என சங்கர் கூறியுள்ளார். சிவாஜி எழுந்து நின்று கைதட்டி சித்தம் முருகா உன் சித்தம் முருகா என்று கூறியுள்ளார். நடிகர் திலகத்தின் நடிப்பில் இந்த பாடல் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அந்த பாடல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த பாடல் பற்றி சங்கரிடம் பேசிய எம் ஜி ஆர், கண்ணதாசன் எழுத்திலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையிலும் தம்பி சிவாஜியின் அற்புத நடிப்பிலும் அந்த பாடலில் ஒரு தெய்வ அம்சம் தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் எனக்கு கோபம் வரும்போது எல்லாம் இந்த பாட்டை கேட்டால் மனம் சாந்தமாகிறது என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். அந்த பாடல் தான் “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்ற பாடல். சிவாஜி நடித்த எத்தனையோ திரைப்படங்களைப் பற்றி எம்ஜிஆர் புகழ்ந்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

7 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

10 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

12 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

25 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

27 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

27 minutes ago