Categories: சினிமா

கோபம் வரும்போது எல்லாம் எம்ஜிஆர் கேட்கும் சிவாஜியின் பாடல்.. இன்னைக்கும் அந்த பாட்ட கேட்டா மனம் சாந்தமாகிடுமாம்..!

Spread the love

இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார்.  இப்படியான நிலையில் எம்ஜிஆருக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு சிவாஜியின் பாட்டை கேட்பாராம். அதாவது இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆண்டவன் கட்டளை. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரையும் வைத்து படங்களை இயக்கியவர் இயக்குனர் கே ஷங்கர் இந்த திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் சிவாஜியை வைத்து முருகனின் அறுபடை வீடுகளில் வைத்து ஒரு பாடல் காட்சியை எடுக்கப் போவதாக சொல்ல, சிவாஜியோ ஒரு பாடலுக்கு இத்தனை இடங்களில் வைத்து எடுக்க வேண்டுமா என்று சலிப்புடன் கேட்டுள்ளார். இந்த பாடல் காட்சி உங்களுக்கு பெரிய அளவு பெயர் தேடித் தரும், அதனால் நீங்கள் சிரமப்பட்டு தான் ஆக வேண்டும், இது முருகனின் கட்டளை என சங்கர் கூறியுள்ளார். சிவாஜி எழுந்து நின்று கைதட்டி சித்தம் முருகா உன் சித்தம் முருகா என்று கூறியுள்ளார். நடிகர் திலகத்தின் நடிப்பில் இந்த பாடல் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அந்த பாடல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த பாடல் பற்றி சங்கரிடம் பேசிய எம் ஜி ஆர், கண்ணதாசன் எழுத்திலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையிலும் தம்பி சிவாஜியின் அற்புத நடிப்பிலும் அந்த பாடலில் ஒரு தெய்வ அம்சம் தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் எனக்கு கோபம் வரும்போது எல்லாம் இந்த பாட்டை கேட்டால் மனம் சாந்தமாகிறது என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். அந்த பாடல் தான் “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்ற பாடல். சிவாஜி நடித்த எத்தனையோ திரைப்படங்களைப் பற்றி எம்ஜிஆர் புகழ்ந்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

16 minutes ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

26 minutes ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

40 minutes ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

46 minutes ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

48 minutes ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

53 minutes ago