கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர் புதிய கட்சி தொடங்கியது அவரது ஜனநாயக உரிமை என்றும் குறிப்பிட்டார். பா.ஜ.கவிற்குள் அவருக்கு என்ன வேதனை இருந்தது என்பது அண்ணாமலைக்கே வெளிச்சம் என்று கூறிய அவர், இனி நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், போதைப்பொருள் நடமாட்டம் தீவிரமாக தடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், எவ்வித தலையீடுமின்றி அடுத்த 6 மாத காலத்திற்கு அரசு தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அதைத் தடுப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மேற்கொள்வார் என்றும் உறுதியளித்தார். மேலும், தமிழகத்தில் வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அரசு தயாராக இருப்பதாகவும், இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பருவமழை மேலாண்மையில் ஏதேனும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், அதன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும்…
மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் விட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவோடு காங்கிரஸ் வேட்பாளராகப் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டார். வேட்புமனு…
டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்த தேவஸ்மிதா பால் (35), கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவில்…