Connect with us

TRENDING

தனியார் ஹாஸ்பிடல்ல இது தான் நடக்குது.. தயவு செஞ்சி அத பண்ணாதீங்க.. வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்த சத்யராஜின் மகள்..

80,90 காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த சத்யராஜ் அவர்களின் மகள்தான் திவ்யா சத்யராஜ். இவர் சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து நிபுணர் படிப்பை முடித்துவிட்டு, சமூக ஆர்வலராக தொண்டு செய்து வருகிறார். இவர் சகோதரரான சிபி சத்யராஜ் அவர்கள் சினிமா துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ஒரு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திவ்யா தனது அப்பா சத்யராஜ் போல பெரியார் இயக்க வாதியும், கம்யூனிஸ்ட் வாதியாக சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா மற்றும் உலகில் நடக்கும் பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி தனது கருத்துகளை வெளிக்கொண்டு வந்து மக்களிடம் சேர்கிறார். ஒட்டுமொத்தமாக நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் திவ்ய சத்யராஜ் முன்வந்து குரல் கொடுத்து இந்த அநீதிக்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார். தற்போது மத்திய அரசின் மோடி திட்டத்திற்கு கீழ் கொண்டு வந்த நீட் தேர்வின் பிரச்சினைகளைப் பற்றி கூட இவர் பெரிதாக விவாதித்து தப்புகளை சுட்டி கட்டி இருந்தார். இதனால் மக்களிடையே இவர் பெரும் ஆதரவை பெற்றிருந்தார். சில தினங்களுக்கு முன்னால் மதச்சாரந்த ஒரு கட்சி, என்னை வரும் எலக்ஷனில் அவர்கள் கட்சி சார்பாக போட்டியிட கேட்டுள்ளார்கள்.

   

ஆனால் நான் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க போகிறேன், தேர்தல் முடிந்தபின் அது எந்த கட்சி என்று வெளிப்படுத்துகிறேன் என்றும், ஆனால் எந்த மத சார்ந்த கட்சிக்கும் ஒத்துப் போக மாட்டேன் என்றும் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். தற்போது இவர் நடக்கும் அநீதிக்கு குரல் கொடுப்பது போல, தனியார் மருத்துவமனையில் நடக்கும் ஏமாற்று வேலைகளைப் பற்றி ஓபன் ஆக தனது கருத்துகளைப் பேசி வெளியிட்டு இருந்தார். அதாவது, நோய் குணமான பின்பும் மருத்துவமனை லாபத்திற்காக இரண்டு நாட்கள் தங்க வைப்பதும்,

இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்ப்பதும், தேவையில்லாத விஷயங்களுக்கு ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் பறிப்பதும் என்று பல தவறான விஷயங்கள் தனியார் மருத்துவமனையில் நடந்து கொண்டிருக்கிறது. பணத்திற்காக பல மருத்துவர்கள் இது போல் மக்களை ஏமாற்றி சுயலாபம் சம்பாதித்து வருகிறார்கள். அதனால் மக்கள் எல்லோரும் விழிப்புணர்வுடன் இருங்கள். இதை மாற்ற வேண்டும் என்று தனது கருத்தை பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார், தற்போது இது மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in TRENDING

To Top