#image_title
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் மறைந்த பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். நேற்று விஜய் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, ஆகியோர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி ஆசீர்வாதம் பெறுவது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. நேற்றைய தினம் விஜயகாந்த் வீட்டில் வீட்டில் அவர்கள் என்னென்ன பேசியிருப்பார்கள் என பல்வேறு செய்திகள் இணையத்தில் உலா வருகிறது. அரசியல் பற்றி பேசி இருப்பார்கள், கூட்டணி பற்றி பேசி இருப்பார்கள் என ஏராளமான செய்திகள் உலா வருகிறது.
இந்த நிலையில் வலைப்பேச்சு யூடியூப் சேனல் அந்தணன் கூறியதாவது, விஜய் விஜயகாந்தின் இரு மகன்களுடனும் மிகுந்த அக்கறையுடன் பேசி கொண்டிருந்தாராம். விஜயின் 69-ஆவது படத்தில் விஜயகாந்த் மகனான சண்முக பாண்டியனை நடிக்க வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் விஜயின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் செந்தூரப்பாண்டி. அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். தனது நன்றியை மறவாது சண்முக பாண்டியனை தனது 69-ஆவது படத்தில் விஜய் நடிக்க வைப்பது குறித்தும் பேசி இருக்க வாய்ப்பு உள்ளது என அந்தணன் கூறியுள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…