Categories: சினிமா

எம் ஜி ஆரால் போலீஸிடம் லத்தியடி வாங்கிய ரஜினிகாந்த்… இது எப்ப நடந்தது?

Spread the love

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. ஆனால் அதன் பிறகு ரஜினியை ஒரு வெற்றிகரமான கதாநாயகன் ஆக்கியது பஞ்சு அருணாச்சலம்தான். அவர்தான் பிரியா என்ற படத்தில் ரஜினியைக் கதாநாயகன் ஆக்கி சிங்கப்பூர் எல்லாம் சென்று படமாக்கி வந்தார்.

அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவில் எம் ஜி ஆரின் இடத்தை நிரப்பினார். அவர் படம் நாளுக்கு நாள் பிஸ்னஸ் அதிகமாகிக் கொண்டே சென்றது. ரஜினி, சூப்பர் ஸ்டாராக உருவான போது தமிழகத்தின் முதலமைச்சராகா இருந்தவர், அவருக்கு முன்பு சூப்பர் ஸ்டாராக இருந்த எம் ஜி ஆர். ஆனால் ரஜினிக்கும் எம் ஜி ஆருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. எம் ஜி ஆர் ஒருமுறை ரஜினியை தன் இல்லத்துக்கு அழைத்து தாக்கியதாகவும் வதந்திகள் உலாவந்தன.

இந்நிலையில் எம் ஜி ஆரின் அரசியல் கூட்டம் ஒன்றுக்கு சென்று ரஜினி போலீஸாரிடம் லத்தியால் அடிவாங்கிய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. எம் ஜி ஆரின் அந்த கூட்டத்தில் தனது நண்பர்களோடு லுங்கி அணிந்து சென்றுள்ளார் ரஜினி. அப்போது அவர் நடிகர் ஆகியிருக்கவில்லை.

ஆனால் அந்த கூட்டத்தில் திடீரென கல்லெறிந்து சிலர் கலவரம் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் கூட்டம் கலைந்து ஓட, ரஜினியின் நண்பர்கள் தப்பித்து ஓடிவிட்டார்களாம். ஆனால் ரஜினி போலிஸாரிடம் மாட்டிகொண்டுள்ளார். அவருடைய தோற்றத்தைப் பார்த்த போலீஸார் ஒருவர் அவரும் கலவரக்காரர்களில் ஒருவர் என்று நினைத்து அவர் முதுகில் லத்தியால் தாக்கியுள்ளார். வீட்டுக்கு ஓடி சென்று பார்த்தபோது ரஜினியின் முதுகில் ரத்தம் கன்றி போய் சிவப்பாக இருந்ததாம்.

vinoth

Recent Posts

அமெரிக்கா – ஈரான் போர் ஓவர்…! “லூசுகளிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது”… ட்ரம்ப் விளாசல்…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக…

15 minutes ago

டால்பின் படை ரெடி…! அமெரிக்காவிற்கு ஈரான் கொடுக்கும் ‘வெடி’ அச்சுறுத்தல்…. கலக்கத்தில் டிரம்ப்…!!

அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…

20 minutes ago

இனி இவர்தான் டிராஃபிக் போலீஸ்…! சீன சாலைகளில் களமிறங்கிய ரோபோக்கள்…. வியக்க வைக்கும் சாதனை…!!

சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…

57 minutes ago

“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

2 மணத்தியாலங்கள் ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

2 மணத்தியாலங்கள் ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

2 மணத்தியாலங்கள் ago