Connect with us

CINEMA

அஞ்சலி செலுத்த வந்தபோது விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம்.. விஜய் மக்கள் இயக்கம் எடுத்த அதிரடி முடிவு.. சூடு பிடிக்கும் விவகாரம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T  திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் சூட்டிங்  வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்தின் மறைவை கேள்விப்பட்டதும்  உடனடியாக சென்னை வந்தார்.

#image_title

   

டிசம்பர் 28ஆம் தேதி சென்னை வந்த அவர் கேப்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலை பார்த்து நடிகர் விஜய் கலங்கி நின்ற வீடியோ கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியும் உதவி செய்தார்.

நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி நடிகர் விஜய்க்கு நடந்த சம்பவம் நம் அனைவருக்கும் நியாபகமிருக்கும். அவரை  பார்த்து ‘வெளியே போ’ என்று விஜயகாந்த் ரசிகர்கள் முழக்கமிட்டனர். அது மட்டுமின்றி நடிகர் விஜயின் மீது செருப்பும் கழட்டி  வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில்  வெளியாகி  வைரலானது.

இந்நிலையில் ‘ தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.அந்த புகாரில்  ‘தளபதி விஜய் அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பொது இடத்தில் காலணி கழட்டி எறிந்தது சம்பந்தமாக புகார் மனு அளிப்பதாகவும், இது போன்ற அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கூறப்பட்டுள்ளது. இதோ அந்த புகார்…

#image_title

 

Continue Reading

More in CINEMA

To Top