CINEMA
ஐயோ செல்லத்துக்கு என்ன ஆச்சு..? கண் கலங்கி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா..!!
திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் விஜயுடன் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து சமந்தா பிரபலமானார்.
மேலும் தனுஷ், விஷால், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் சமந்தா நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமீபத்தில் விஜய தேவர்கொண்டா உடன் சமந்தா நடித்த குஷி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது உடல் நலம் சற்று தேறியதால் மீண்டும் படபிடிப்புகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு சமந்தா ஓய்வு எடுத்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கண் கலங்கி சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சமந்தாவிற்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.