#image_title
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார் .இந்த பாடல் செம ஹிட் அடித்தது. அதேபோல பல மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரி குவித்தது. இந்த சூழலில் புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவனத்தில் ஈர்த்தது.
மேலும் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் இரண்டு மில்லினுக்கும் அதிகமான சாதனை படைத்தது. அதோடு புஷ்பா-2 திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் 15 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் பகத் பாசிலுக்கு எட்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் தான் இருப்பார் .ஏனென்றால் இவரை காட்டிலும் விஜய்ன்னுடைய சம்பளம் குறைவு தான். மேலும் ஷாருக்கான் உடைய சம்பளமும் இதைவிட குறைவுதான் .
மேலும் புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ரீலிலா நடனமாடி இருந்தார். அதற்காக அவருக்கு இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளமே பெரிய தொகை செலவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…