#image_title
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார் .இந்த பாடல் செம ஹிட் அடித்தது. அதேபோல பல மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரி குவித்தது. இந்த சூழலில் புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவனத்தில் ஈர்த்தது.
மேலும் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் இரண்டு மில்லினுக்கும் அதிகமான சாதனை படைத்தது. அதோடு புஷ்பா-2 திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் 15 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் பகத் பாசிலுக்கு எட்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் தான் இருப்பார் .ஏனென்றால் இவரை காட்டிலும் விஜய்ன்னுடைய சம்பளம் குறைவு தான். மேலும் ஷாருக்கான் உடைய சம்பளமும் இதைவிட குறைவுதான் .
மேலும் புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்துக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ரீலிலா நடனமாடி இருந்தார். அதற்காக அவருக்கு இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளமே பெரிய தொகை செலவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…