#image_title
தமிழ் கடவுளாக கூறப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகள்தான். எப்படி தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருக்கிறதோ அதேபோல சபரிமலை நாயகன் ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் இருக்கிறது. அவை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
ஐயப்பனின் அறுபடை வீடுகளாக கூறப்படுவது ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை என ஆறு கோவில்கள் ஆகும்.
1. ஆரியங்காவு: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் ஆரியங்காவு கோவிலுக்கு செல்ல வேண்டும். மற்ற கோவிலில் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவே காட்சியளிப்பார். ஆனால் இந்த கோவிலில் ஐயப்பன் சௌராஷ்ட்ரா குலதேவியான புஷ்கலா தேவியுடன் அரசகோலத்தில் காட்சியளிக்கிறார்.
2. அச்சன்கோவில்: அடுத்ததாக தரிசிக்க வேண்டிய இடம் அச்சன்கோவில். இந்த கோவிலில் இருக்கும் ஐயப்பன் விக்ரகம் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். ஐயப்பன் போருக்கு பயன்படுத்திய வாள் இங்கே பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
3. குளத்துப்புழா: ஐயப்பன் பால்ய வயதில் இருப்பது போன்ற தோற்றத்தை கொண்டு இருக்கும் பாலகன் கோவில் தான் இந்த குளத்துப்புழா ஆகும்.
4. எருமேலி: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் தவிர்க்காமல் செல்லக்கூடிய ஒரு இடம் எருமேலி. இந்த கோவிலில் தான் ஐயப்பன் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் கையில் வில் மற்றும் அம்புகளை வைத்தவாறு காட்சியளிக்கிறார். 5.பந்தளம்: காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட ஐயப்பன் மன்னன் ராஜசேகரனால் 12 வயது வரையிலும் அரண்மனையில் வளர்க்கப்பட்ட இடமாகும். பந்தளம் அரண்மனை சபரிமலையில் இருந்து சுமார் 88 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
6. சபரிமலை: ஐயப்பன் துறவறம் மேற்கொள்ள வில்லெடுத்து அம்பெய்தார். அந்த அம்பு வந்து விழுந்த இடமே சபரிமலை ஆகும். ஐயப்பனுக்கு மாலை போட்டு வரும் பக்தர்கள் அனைவரும் செல்லக்கூடிய இடம் தான் இந்த சபரிமலை. இங்கு தான் ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக இருக்கிறார். பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் புனித யாத்திரை சென்றதன் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…