Categories: சினிமா

கவுண்டமணி சார் கூட நடிக்கவே முடியாது… ரொம்ப கஷ்டப்படுவேன் –நடிகை விஜயசாந்தி பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்தான் விஜயசாந்தி. தெலுங்கு சினிமாவில் ஆக்‌ஷன் கதாநாயகியாக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அவர் முன்னணிக் கதாநாயகர்களுக்கு இணையான மார்க்கெட்டை வைத்திருந்தார்.

இதன் காரணமாகவே அவர் அரசியலுக்கும் வந்தார். ஆனால் அரசியலில் அவரால் பெரியளவில் சாதிக்க முடியவில்லை.  அதன் பின்னர் சினிமாவிலும் அவர் பெரிதாக நடிக்கவில்லை.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயசாந்தி தென்னிந்திய தமிழ் சினிமாவில்”கல்லுக்குள் ஈரம்” என்னும் படம் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். அந்த படத்துக்காக பாரதிராஜா அவரை ஒரு போட்டோவை பார்த்துதான் தேர்வு செய்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

#image_title

இதில் தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். அதன் பின்னர் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படத்தில் அவரை எதிர்த்து போட்டிபோடும் ஆதிக்கம் செலுத்தும் மனைவியாக நடித்து மிரட்டியிருப்பார். அந்த படத்தில் அவர் ரஜினி, கவுண்டமணி மற்றும் விஜயசாந்தி ஆகியோர் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் நடித்த அனுபவத்தை விஜயசாந்தி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “மன்னன் படத்தில் அந்த தியேட்டர் காட்சியில் நடிக்கும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் ரஜினிசாரின் கெட்டப்பும், கவுண்டமணி சாரின் வசனங்களும் எனக்கு சிரிப்பை வரவழைத்தன. அவர் ஒவ்வொரு முறை வசனம் பேசும்போதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கஷ்டப்பட்டுதான் நடித்தேன். கவுண்டமணி சார் என்னுடைய முதல் படத்திலும் நடித்திருந்தார். அவரோடு நடித்தது சிறப்பான அனுபவம்” எனக் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago