BREAKING: தவெக ஆட்சியில் ரூ.1,000 கோடி பஞ்சமி நில மோசடி?…. வெடி குண்டைத் தூக்கிப்போட்ட வேல்முருகன்….!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசின் முதல் பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்த சூழலில், தவெக அரசு மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே பழனியில் அரசுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தில் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது பண்ருட்டியில் பஞ்சமி நில விற்பனை தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வேல்முருகன், பண்ருட்டி வட்டத்தில் உள்ள ரூ.1,000 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, தவெக அரசின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டுடன் ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்ய தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

இந்த நிலம் குறித்து விளக்கிய வேல்முருகன், 1924-ஆம் ஆண்டு பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஒரு தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி வாங்கியதாகவும், பின்னர் தொழிற்சாலையை மூடிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். தற்போது ஏக்கர் ரூ.10 கோடி என மதிப்பு உயர்ந்துள்ள இந்த நிலத்தில் ஏழை மக்களுக்கு வீடுகளோ அல்லது தொழிற்கூடங்களோ அமைத்துத் தர வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், தவெக அரசு தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அதை மனைப்பிரிவுகளாக விற்க முற்படுவதாகக் குறிப்பிட்டார்.

பத்திரப்பதிவுத் துறையின் கூடுதல் ஐ.ஜி ஆலோசனை மற்றும் மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த நில விற்பனை முயற்சி நடப்பதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாகத் துறைச் செயலாளருக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். ஏழை மற்றும் பட்டியலின மக்களுக்குச் சொந்தமான நிலத்தைத் தாரைவார்ப்பதற்கு அனுமதி அளித்த அந்த ‘மேலிடம்’ எது என்று கேள்வி எழுப்பியுள்ள வேல்முருகன், ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த முதலமைச்சரும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும் இதற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

8 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

9 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

9 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

9 மணத்தியாலங்கள் ago