தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். கோலிவுடில் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
அதாவது லியோ ட்ரெய்லரை பார்ப்பதற்காக ஒரு சில திரையரங்குகளில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு சில ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டது. அப்படி சென்னை ரோகிணி திரையரங்கிலும் விஜய் ரசிகர்களுக்காக ஒரு ஸ்கிரீனில் லியோ டிரைலர் வெளியானது. இதில் ஓவர் எமோஷனலான ரசிகர்கள் ரோகினி திரையரங்கை காயலான் கடை போல மாற்றி விட்டார்கள்.
400 இருக்கைகள் உட்பட 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது பற்றி ரோகிணி திரையரங்கம் சார்பில் காவல்துறையில் எந்த புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் இதை கேள்விப்பட்ட நடிகர் விஜய் அன்று இரவே ரோகிணி திரையரங்கின் உரிமையாளரை அழைத்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக ரோகினி திரையரங்கின் உரிமையாளர் பேட்டி ஒன்றில் கூறி இருக்கின்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பிரதீப் ஆண்டனி தனது காதலியுடன் கவின் நடித்த 'ஸ்டார்' படத்தை பார்க்க சென்றுள்ள…
எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் திரைக்கதை வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அதில் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள்…
தமிழ் சினிமாவில் கவுண்டமணி 2.0 வெர்ஷனாக வந்து கலக்கியவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்து…
நடிகர் கவின் நடிப்பில் நேற்று வெளியான ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமா உருவாக்கிய மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் எஸ் வி ரங்காராவ். ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில்…
இன்றைய தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கின்றதோ, அதே அளவு நடிகைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கின்றது. அதிலும் பெண்களை…