சமூக வலைத்தளங்கள் நம்மை ஆக்கிரமித்து விட்டது. நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாம் நினைத்தாலும் கூட சமூக வலைத்தளங்களில் இருந்து தள்ளி இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு பின்னிப்பிணைந்து விட்டது. ஆனால் இந்த சமூக வலைத்தளங்களால் ஒவ்வொரு குடும்பங்களிலும் நடக்கும் பிரச்சனைகள் உறவுகளில் விரிசல் ஏற்படுவது ஆகியவற்றை பற்றி உங்களுக்கு தெரியுமா? சமூக ஊடகங்களால் என்னென்ன பிரச்சினைகள் உருவாகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
சமூக ஊடகங்களின் பயன்பாடு தற்போது பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் தேவைகள் ஒரு புறம் இருந்தாலும் இதன் எதிர்வினைகள் என்பது அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் நேருக்கு நேர் அமர்ந்து பார்த்து பேசுவார்கள். இப்போது சமூக ஊடகங்கள் வந்தது தான் எல்லாமே வாட்ஸ் அப்பில் செய்தி குறுஞ்செய்தி என்று உறவுகளுக்கு இடையே ஒரு பாலம் அமைத்து விட்டார்கள். இதனால் அன்பு பாசம் என்பது குறைந்து விடுகிறது. பேச்சுவார்த்தை குறைந்தால் உறவு எப்படி இருக்கும். அந்த நிலையில் தான் சென்று கொண்டே இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவர் பதிவிடுவதை பார்த்து நமது குடும்பத்தில் அப்படி இல்லையே நம்முடைய கணவரோ அல்லது மனைவி இப்படி நடந்து கொள்ளவில்லையே என்று எதிர்பார்ப்புகள் அதிகமாகி அதுவே பல பிரச்சினைகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் வழிவகுக்கிறது. சமூக வலைத்தளத்தை பார்த்தோமா அதை விட்டோமா என்று பலர் நினைப்பது இல்லை. அதை தலையில் ஏற்றிக்கொண்டு நம் வாழ்க்கையிலும் அதை மாதிரி நடக்காதா என்று கற்பனையினால் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அடுத்ததாக சமூக வலைத்தளங்களில் அடிக்ட் ஆகி இருப்பவர்களும் உண்டு. வீட்டிற்குள் கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் இருவரும் சேர்ந்து குழந்தைகள் அப்பா அம்மா மாமியார் மாமனார் என நேரம் ஒதுக்க வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களை பார்த்துக்கொண்டே ஆளாளுக்கு தனித்தனியாக அமர்ந்து கொள்கிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை என்பது இல்லாமல் போகிறது. சிறிய விஷயங்களுக்கு கூட பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகிறது.
சமூக ஊடகங்களால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு முடிவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்த தொழில்நுட்பம் வளர்ந்தது அனைவரும் வாழ்க்கைக்கு தேவை தான் ஆனால் அவை நம்மை ஆட்டி வைக்க கூடாது நம்முடைய அன்றாட பணிகளையும் நமது குடும்ப வாழ்க்கையும் அது எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…