பீகார் அரசு நிலத்தின் குறைந்தபட்ச மதிப்புப் பதிவேட்டை மாற்றியமைத்துள்ளதால், ஜூன் 19 முதல் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலப் பதிவுக் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த மண்டல வாரியான மாற்றத்தின்படி, நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பதிவுக் கட்டணங்கள் சுமார் 2 மடங்கும், கிராமப்புறங்களில் 1.6 மடங்கும் அதிகரித்துள்ளன. மேலும், முத்திரைத்தாள் கட்டணம் 6%-லிருந்து 7%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மதிப்பு உயர்வால் வங்கிகள் சொத்துக்களின் மீது அதிக கடன் வழங்க வாய்ப்புள்ளதோடு, நில ஆவணங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து முறைகேடுகள் குறையும் என பீகார் அரசு நம்புகிறது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், முத்திரைத்தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதால், இங்கும் விரைவில் கட்டண உயர்வு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டில் 100 ரூபாய் முத்திரைத்தாள் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைத்தாள் 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், பீகாரைப் போல உடனடியாக இங்கு 2 மடங்கு கட்டண உயர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பீகாரில் சொத்துக்களின் குறைந்தபட்ச சந்தை மதிப்பு மிகக் குறைவாக இருந்ததால் தற்போது அங்கு இரு மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே பல பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்புக்கு நிகராகச் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போது நிலப் பதிவுக் கட்டணம் 11% ஆக இருப்பதாலும், சமீபத்தில்தான் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாலும், உடனடியாக பொதுவான நிலப் பதிவுக் கட்டணங்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று துறை சார்ந்த நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…