“கேம் சேஞ்சர்”.. 40 கோடி பேசி கடைசியில ஃப்ரீயாவே கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜ்.. என்ன காரணம் தெரியுமா..?

Spread the love

நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் சங்கர் எடுத்துள்ளார். ராம்சரண் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தில்ராஜ் ப்ரொடக்ஷன் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படத்தை சங்கர் நேரடி தெலுங்கு திரைப்படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடித்தடத்தை பதித்துள்ளார்.

இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர், அவருடைய படங்களில் பல சாதனைகள் செய்யப்படும் என்பது தவிர்க்க முடியாது. அதை தனது தெலுங்கு சினிமாவிலேயே செய்ய ஆரம்பித்துள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்த சங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது இந்திய வரலாற்றில் தெலுங்கு சினிமா செய்யும் சாதனை என்றே கூறப்படுகின்றது. ஏனென்றால் இதற்கு முன்பு எந்த தெலுங்கு படமும் அமெரிக்காவில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தியது இல்லை. மேலும் இந்த திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமைக்கு தில்ராஜ் 40 கோடி ரூபாய் என்று முடிவு செய்துள்ளார். அதன் பிறகு 15 கோடி என ஆரம்பித்த நிலையில் அதெல்லாம் நமக்கு செட்டாகாது என்று தில்ராஜ் கூறி இது சங்கர் படம் என்று சொல்லி உள்ளார். இந்தியன் 2 திரைப்படத்திற்கு முன்பு வேண்டுமென்றால் நீங்க அப்படி சொல்லலாம் இப்போ அப்படி சொல்ல முடியாது என்று கூற உடனே தில்ராஜ் நீங்க 15 கோடி என்று சொல்லி என்ன அசிங்கப்படுத்தாதீங்க ஃப்ரீ ரிலீஸ் பண்ணுங்க அதுல வர லாபம் என்னவோ அதை நான் எடுத்துக்கிறேன் என்று கூறி சத்தியம் தியேட்டரின் முன்னாள் ஓனர் சொரோப் ரெட்டிக்கு தான் திரையரங்கு உரிமையை தில்ராஜ் கொடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

பாமக எடுத்த ‘திடீர்’ முடிவு… அதிர்ச்சியில் எடப்பாடி… இடைத்தேர்தலில் ஆட்டம் கண்ட அதிமுக…. கடைசி நேரத்தில் அன்புமணி வைத்த ‘செக்’….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று…

4 minutes ago

அய்யய்யோ… டிராக்டர் வருது ஓடுங்க… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நொடியில் நடந்த கொடூரம்… சிறுமி பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…

27 minutes ago

அட கொடுமையே… நடுரோட்டில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து… வாலிபர் பரிதாப பலி… புனே நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்…!

புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…

35 minutes ago

ஐயோ… நாய் துரத்துதே… பதறியடித்து வண்டியை முடுக்கிய செவிலியர்… நிலைதடுமாறி விழுந்த மாணவி பரிதாப பலி… ஹல்தவானியில் நடந்த சோகம்…!

ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…

45 minutes ago