Connect with us

CINEMA

ரஜினியின் சம்பளம் 300 கோடி, நெல்சனுக்கு 100 கோடி… கோடம்பாக்கம் சமஸ்தானத்தை ஆட்டம் காண வைத்த ப்ளூ சட்டை மாறன்..!!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதுவரை உலக அளவில் சுமார் 600 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் எடுக்க செலவு செய்யப்பட்ட பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய் இந்த திரைப்படம் லாபம் கொடுத்துள்ளதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகிழ்ச்சியில் உள்ளார்.

   

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்விட்டரில் பகிர்ந்து உள்ள ஒரு பதிவு கோலிவுட்டை ஆட்டம் காண வைத்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினியின் சம்பளம் 80 கோடி என முதலில் தகவல் வெளியான நிலையில் அதன் பிறகு வசூல் 600 கோடியை தாண்டியதும் நடிகர் ரஜினிக்கு 100 கோடி ரூபாய் காண செக்கை கலாநிதி மாறன் வழங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு ரஜினி 200 கோடியிலிருந்து 250 கோடி வரை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தலைவர் சம்பளம் 300 கோடியாக உயர்வு, paddy sun சம்பளம் இனி 100 கோடி என ப்ளூ சட்டை மாறன் ரஜினியின் சம்பளம் 300 கோடி எனவும் நெல்சன் சம்பளம் 100 கோடி என வடைகளை சுட்டு கோடம்பாக்கம் சமஸ்தானத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார். தற்போது அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top