தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகி சக்க போடு போட்டு வருகிறது. சூப்பர் ஸ்டாருக்கு இரண்டு மகள்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவருடைய இரண்டாவது மகள் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் ஒரு திரைப்பட கிராபிக் டிசைனர். ‘படையப்பா’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு கிராபிக்கை உருவாக்கியது இவர்தான்.
இதைத் தொடர்ந்து தனது அப்பாவின் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் 2010ல் அஸ்வின் ராம்குமார் என்ற பிசினஸ்மேனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011 இல் வேத் என்ற மகன் பிறந்தார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016 விவாகரத்து பெற்றனர்.
தனது தந்தையின் திரைப்படம் அல்லாமல் இவர் சண்டைக்கோழி ,மஜா, சென்னை 28 , குசேலன், சிவகாசி போன்ற படங்களிலும் கிராபிக் டிசைனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு அழகான மகன் பிறந்துள்ளார். தற்பொழுது இவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பழைய பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதில் அவரிடம் ‘தனித்தீவில் இரண்டு ஆண்களுடன் வசிக்க வேண்டும் என்றால் யாருடன் வசிப்பீர்கள்?’ என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அப்படி நிலைமை ஏற்பட்டால் இயக்குநர் சங்கர் மற்றும் இயக்குநர் ராஜமௌலி ஆகியோருடன் தனித்தீவில் வசிப்பேன் என கூறியிருந்தார். தற்பொழுது இப்பேட்டியானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…