தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார். ஆனாலும் 60 கள் மற்றும் 70 களில் முன்னணி நடிகராகவும் வந்தார்.
அவருக்குப் பிறகு அவரின் வாரிசுகள் பலர் தமிழ் சினிமாவில் இன்றளவும் நடித்து வருகின்றனர். அவரின் மகன்களில் ஒருவரான ராதாரவி கே பாலச்சந்தரின் மன்மத லீலை திரைப்படத்தின் மூலம் நடிகரானார். தந்தை வழியைப் பின்பற்றி குணச்சித்திரம் மற்றும் வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடித்துக் கலக்கினார். 80 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த தற்போது வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை எனக் கலக்கி வருகிறார்.
ராதாரவி நடிகர் மட்டுமில்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் டப்பிங் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவரின் தனித்துவமான குரல் வெளியே தெரியாமல் அவர் டப்பிங் பேசிய கதாபாத்திரங்களில் ஒன்று ஆடுகளம் படத்தின் பேட்டக்காரன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரம் கொண்டாடப்பட்டதற்கு ராதாரவியின் குரலும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.
இந்த படத்த்க்காக டப்பிங் பேசிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ள அவர் “வெற்றிமாறன் நல்ல இயக்குனர். அந்த டப்பிங்கின் போதுதான் அவரோடு எனக்குப் பழக்கம். டப்பிங்கில் கரெக்ஷன் சொல்லும்போது கூட அவர் பணிவாக பேசி வேலை வாங்குவார். என்னிடம் கரெக்ஷன் சொல்வது பெரிசில்லை. ஆனால் அதில் என்ன தவறு நடந்தது என சொல்லவேண்டும். அதை சரியாக சொல்லி வேலை வாங்குவார் வெற்றிமாறன்” எனக் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த…
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…
மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…